அரண்மனை படத்தின் மூலம் தனக்கு நடிக்கவும் வரும் என்று நிருபித்தார் ஆண்ட்ரியா. ஆனால், இவர் நடிப்பதை காட்டிலும், இவரது குரலுக்கு தான் பல ரசிகர்கள் உள்ளனர்.இந்நிலையில் காஷ்மீரில் பெய்து வரும் தொடர் மழையால், அங்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.இதற்காக சென்னையில் வரும் 18ம் தேதி ஒரு கலை நிகழ்ச்சி நடக்கவுள்ளது. இதில் ஆண்ட்ரியா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பாடவுள்ளார். இதில் வரும் வருமானம் முழுவதையும் காஷ்மீர் வெள்ள நிவாரண நிதியாக கொடுக்க இருக்கிறாராம்.

No comments:
Post a Comment