Monday 1 December 2014

யாருக்கும் தெரியாமல் டீச்சர் வேலை பார்க்கும் தேவயானி!






தமிழ் சினிமா ரசிகர்களுக்கு காதல் கோட்டை, ப்ரண்ட்ஸ், பஞ்ச தந்திரம் போன்ற படங்களின் மூலம் அறியப்பட்டவர் தேவயானி. இவர் சின்னத்திரை, வெள்ளித்திரை என இரண்டிலும் கலக்கியவர்.இவர் யாருக்கும் தெரியாமல் ஒரு கான்வெண்ட் பள்ளியில் டீச்சராக பணியாற்றி வருகிறார். இது குறித்து அவரிடம் பேசுகையில் ‘எனக்கு ஏதாவது வித்தியாசமாக செய்ய வேண்டும் என்று ஒரு ஆவல்.இதனால் ஒரு டீச்சர் ட்ரையினிங் கோர்ஸ் படித்தேன். பின் ஒரு நாள் என் குழந்தைகள் படிக்கும் பள்ளியிலேயே ஆசிரியையாக வேண்டும் என்று எண்ணினேன். ஹெட் மாஸ்டரிடம் பேசும் போது அவர்களும் சம்மதித்து விட்டனர்.தற்போது என் அரவணைப்பில் 45 குழந்தைகள் உள்ளனர். இந்த சேவை எனக்கு மிகவும் பிடித்துள்ளது’ என கூறியுள்ளார்.

No comments:

Post a Comment