Friday 12 December 2014

நடுரோட்டில் நடிகை மீது தாக்குதல்! தொழிலதிபர் கைது!






மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அண்ணா ஹசாரேவுக்கு ஆதரவாக மேலாடை இன்றி போஸ் கொடுத்து நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியவர் நடிகை யோகிதா தன்டேகர்.யோகிதா தன்டேகர், மும்பையில் நேற்று இரவு காரில் பயணம் செய்துகொண்டிருந்த போது, ஒரு சிக்னலில், இரண்டு பேர் அவரை காரிலிருந்து இழுத்துசென்று கன்னத்தில் பலமுறை அறைந்துள்ளனர்.பொதுமக்கள் கூட்டமாக நின்றிருந்தாலும் நடிகைக்கு உதவி செய்ய யாரும் முன்வரவில்லை. இறுதியாக அந்த வழியாக வந்த ஒரு போலீஸ் அதிகாரி அதை கவனித்து, அந்த இரண்டு பேரையும் கைது செய்துள்ளார்.விசாரணையில், அந்த இருவரில் ஒருவர் ஒரு மல்டிநேஷ்னல் கம்பெனி, நடத்தி வரும் தொழிலதிபர் என்பது தெரியவந்தது. மற்றொருவர் அவரிடம் டிரைவர் வேலை செய்து வருபவர்.போலீசார் இருவர் மீதும் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து, மேலும் தாக்குதலுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment