Thursday 25 September 2014

கௌதம் மேனனால், அஜித்-த்ரிஷா இடையே மோதலா?







அஜித் எப்போதும் படப்பிடிப்பில் யார் விஷயத்திலும் தலையிடாமல் தான் உண்டு, தன் வேலையுண்டு என்று இருப்பவர். ஆனால் கௌதம் மேனன் செய்யும் சில வேலைகள் அவரை கொஞ்சம் சங்கடப்படுத்தியுள்ளது.கௌதம் சமீபத்தில் ஒரு பேட்டியில் எனக்கு கதாநாயகிக்கான எந்த கதாபாத்திரம் யோசித்தாலும் முதலில் த்ரிஷா தான் நினைவுக்கு வருகிறார் என்று கூறியிருந்தார்.தற்போது தல-55 படத்தில் இடையில் வந்த த்ரிஷாவிற்கு அதிக காட்சிகள் அமைத்து, அனுஷ்காவை டம்மியாக்கி விட்டாராம் கௌதம். ஆனால் முதலில் அஜித்திடம் சொன்ன ஸ்க்ரிப்ட் வேறு, தற்போது த்ரிஷாவிற்காக ஸ்க்ரிப்டை மாற்றுகிறார் என்று அறிந்த தல, தன் கோபத்தை கௌதமிடம் காட்டியுள்ளார்.இதை அறிந்த த்ரிஷா ‘அஜித் என்னுடைய நல்ல நண்பர், ஏன் இப்படி செய்தார்’ என்று சற்று மனசங்கடம் அடைந்ததாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

No comments:

Post a Comment