Wednesday 26 November 2014

என்னை அறிந்தால் பொங்கலுக்கு வரவில்லையா? அதிர்ச்சியில் ரசிகர்கள்






அஜித் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கும் படம் என்னை அறிந்தால். இப்படம் பொங்கல் அன்று வெளிவரும் என சில நாட்களுக்கு முன் அறிவித்திருந்தனர்.தற்போது வந்த தகவலின் படி படத்தில் இன்னும் சில காட்சிகள் எடுக்கப்பட வேண்டிய நிலையில், ஷுட்டிங் முடிய டிசம்பர் ஆகிவிடுமாம்.இதன் பின்பு அனைத்து வேலைகளும் முடிந்து பொங்கலுக்கு வருமா என்றால் கேள்விக்குறி தான். இச்செய்தி ரசிகர்களை மிகவும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆனால், அதெல்லாம் ஒரு கவலையும் வேண்டாம். எந்த வேலை இருந்தாலும் எப்படியாவது முடித்து படத்தை பொங்கலுக்கு கொண்டு வருவேன் என்று கங்கனம் கட்டியுள்ளார் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம்.

No comments:

Post a Comment